அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவு தொடர்ந்தும் ஊரடங்கு அமுல்
அட்டாளைச்சேனை MOH பிரில் தனிமைப்படுத்தல் ஊரங்கு நீக்குவதில் இன்னும் தீர்மானமில்லை....? (றியாஸ் இஸ்மாயில்) அட்டாளைச்சேனை MOH பிரிவில் உள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் கடந்த 26ம் திகதி மாலை 6.00 மணி முதல் அமுல் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரங்கு இன்று நீக்கப்படலாம் என்ற விடயம் பற்றி எந்தத் தீர்மானமும் இதுவரையும் உயர் மட்டம் கூடி எடுக்கப்படவில்லை. இப்பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் சுயதொழில், வாழ்வாதாரம் மற்றும் ஏனைய தொழில்களைக் கவனத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr. S. அகிலன் ஆகிய நான் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றேன். இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை. எமது MOH பிரிவில் உள்ள பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மதித்து தொடர்ந்தும் செயற்படவும். எமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியலப் பிரிவில் இது வரையும் 59 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டனர். இதில் சிகிச்சையின் பின்னர் 3 பேர் வீடு வந்து மீண்டும் 14 நாட்கள் ...